Friday, September 25, 2020

SPB - Paadum Nila Balu.....


RIP - 25.09.20



சிந்தனை துளிகள் - 2

1. நிராகரிக்கப்பட்ட  இடங்களில் அன்பிற்கான பாடமும் ......

அவமானப்பட்ட இடங்களில் வாழ்க்கைக்கான பாடமும் தொடங்குகின்றது...!


2. என்னைத் தவிர யாரும் உன்னோடு
குப்பை கொட்ட முடியாது என்று
இருவருக்கும் தோன்றும் போது
தான் மேட் ஃபார் ஈச் அதர் என்பது
நிரூபணமாகிறது.


3. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என ஆரம்பித்து

இந்த நிலையே போதும் என்ற நிலைக்கு தள்ளி விடுகிறது....!!

சிலரின் வேண்டுதல்கள்...


4. உங்களை திருத்திக் கொள்ளாமல்

வாசலை இடித்து ஜன்னலாக்குவதாலோ

கழிவறையை இடித்து சமையலறையைக் கொண்டு வருவதாலோ

வசதிகள் மாறலாம்
 
வாழ்க்கை மாறிவிடாது


5. வாழ்க்கை என்பது

வாழை இலையில் ஊற்றிய ரசம் போல

எந்த பக்கம் போகும் என்று கணிப்பது கடினம்.


6. சிந்திக்க தெரிந்த உனக்கு, ஆலோசனைகள் தேவை இல்லை..

சந்திக்க தெரிந்த உனக்கு, தோல்விகளால் கவலை தேவை இல்லை.. 

எதிர்க்க ஆள் இருந்தால் தான், 
ஆட்டத்திலும் ஓட்டம் இருக்கும்... 

காக்க வேண்டாம் நல்ல நேரத்திற்க்காக, 
நீ நடக்கும் நேரமே, நல்ல நேரம்... 

வெற்றி நிச்சயம்!


7. அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று நினைத்து வருந்தாதீர்கள்

அழகான ஓன்றை தான் அசிங்கப்படுத்த முடியுமே தவிர அசிங்கமாக இருப்பதையல்ல


8. ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தை குறை கூறுவது நமது வழக்கம்...

அதை நீரில் விட்டால், நம்மால் தான் பிடிக்க முடியுமா...

இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், எவரும் வல்லவரே... 


9. நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட... 

நம் காதுகளை மூடிக் கொள்வது மிகச் சிறந்தது ...


10. பிறப்பு இறப்பு மட்டுமே நம்மை தேடி வரும்...

மற்றவற்றை நாம் தான் தேடி செல்ல வேண்டும்...


11. ஒரு பெண் தேவதை ஆவதும்

தேவையில்லாமல் போவதும்

அவள் வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்மகனால் தான்


12. உங்கள் காலில்
நில்லுங்கள்...

அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்...


13. சாதிக்க நினைக்கும் உன்னை
சோதிக்க வருவது தான் கோபம்... 

லாபம் யாருக்கு உன் கோபத்தால்... 
தடுக்க நினைப்பவருக்கு தான்..

பொறுமை கொண்டு, உண்மையாய் உழைத்து வா.  

வாய்மைக்கு என்றும்...  வெற்றி நிச்சயம்!


14. உயரத்தில் இருக்கிறோம் என ஆட்டம் போடாதீர்கள்...

தவறி விழ நேர்ந்தால் தரையில் இருப்பவரை விட உங்களுக்கே பாதிப்பு அதிகம்...


16. குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாக பாருங்கள்...

சொல்லப்பட்ட குறை உங்களிடம் உள்ளதா என முதலாவதாக பாருங்கள்...


17. காரணம் இன்றி நாம் யாரையும் சந்திப்பது இல்லை...

பாடமாக சிலர்...

பாலமாக சிலர்...


18. மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்...

ஆடம்பரம் என்பது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் வறுமை...


19. அகம்பாவம் இல்லாமல் பேசுதல்... 
உள்நோக்கம் இல்லாமல் அன்பு செலுத்துதல் ... 
எதிர்பார்ப்பு இல்லாமல் அக்கறையாக இருத்தல்... 
சுயநலமில்லாமல் ப்ரார்த்தனை செய்தல் ...
இவைகள் உண்மையான அன்பின் அடையாளங்கள்.


20. உங்களுக்கு மன அமைதி வேண்டுமென்றால்...

பிறர் குறைகளைக் காண்பதற்குப் பதிலாக உங்கள் குறைகளைக் காண முயற்சி செய்யுங்கள்...


21. எதையும் செய்யாமல் ஆலோசனை மட்டுமே சொல்லும் அறிவாளியை விட...

ஏதாவது செய்து காலத்தை வீணடிக்காமல் அனுபவத்தை கற்று கொள்ள தோல்வியை பெறும் முட்டாள் மேலானவன்...


22. உங்களுக்கு நீங்கள் நல்லவராய் இருந்தால் போதும்...

மற்றவருக்கு நீங்கள் கெட்டவராய் தெரிந்தால் அது உங்கள் குற்றம் அல்ல...


23. முக்கியத்துவம் இல்லாத இடத்தில் 
மீண்டும் மீண்டும் முகம் காட்டுதல் முட்டாள்தனமானது...


24. உதவி என்பது எப்பொழுதும் உனக்கு கிடைத்து கொண்டே இருக்காது. கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது உன்மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே. அதை என்றுமே இழந்து விடாதே.


25. மற்றவர்களின் தூண்டுதலின்பேரின் இல்லாமல்...

 உங்களுக்குள் இயல்பாகவே உண்மையான ஆர்வமும் உழைப்பும் இருக்குமேயானால்...

நீங்கள் இருக்கக்கூடிய துறையில் உங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது...


26. வேடிக்கை பார்ப்பவர்கள் மத்தியில் உங்கள் வேதனையை வெளிப்படுத்தாதீர்கள்...

அதையும் அவர்கள் வேடிக்கையாய் கடந்து சென்று விடக்கூடும்...


27. செய்யும் உதவியை சொல்லிக்காட்டாதீர்கள்

சொல்லிக்காட்டும் வழக்கம் இருந்தால்

உதவியே செய்யாதீர்கள்...


28. உங்களை வளப்படுத்த அதிக நேரம் செலவழியுங்கள்...

பிறரை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்...


29. நம்மால் ஒருவருக்கு பிரச்னை வருகிறது என்றால் அந்த இடத்தை விட்டு விலகிரணும்...

அது உறவானாலும் சரி... உயிர் நட்பென்றாலும் சரி...


30. தன்னுடைய தேவையை கேட்டுப் பெறுபவர்கள் மற்றவர் கண்களுக்கு முட்டாளாக தெரியலாம்...

தனக்கு என்ன தேவை என்றே தெரியாதவர்கள் வாழ்நாள் முழுவதுமே முட்டாளாக வாழ்கின்றார்கள்...


31. பணத்தின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால் செலவு செய்யுங்கள்...

உங்கள் மதிப்பு தெரிய வேண்டும் என்றால் கடன் கேளுங்கள்...


32. கண்ணுக்கே தெரியாத காற்றில், பட்டம்
எதிர் நீச்சல் போடுகிறது..

மண்ணுக்குள்ளே புதைந்த ,விதை போராடி வருகிறது...

பெண்ணுக்குள்ளே இருந்து, அணுவாய் புறப்பட்டவன் நீ . ...

விண்ணை இலக்காக கொண்டு,  
முன்னே நடந்து வா.... வெற்றி நிச்சயம்!


32. தகுதிக்கு மீறி ஆசைப்படகூடாது என்பது சரிதான்...

ஆனால், நம் தகுதி என்ன என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கக்கூடாது


33. எல்லோருக்கும் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒன்று தான்...

மறக்க முடியாத ஒன்றாகவும் இருக்கிறது...


34. அன்று வயதை பார்த்து வந்தது..

இன்று வசதியை பார்த்து தான் வருகிறது

மரியாதை...


35. உறவுகள் என்பது நிலாவை போன்றது தான்...

தூரத்தில் இருக்கும் வரை ரசித்து கொண்டாடப்படும்...


36. வாழ்க்கையில் பாடங்களை கற்றுக் கொள்ள தயங்காதே!! 

படங்கள் மனதில் நிற்ப்பது இல்லை... 
பாடங்கள் அனுபவங்களாய் நிற்க்கும்.. 

வீழும் நிலை வந்தாலும், 
வாழ வைக்கும்.. 

கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.... 

கற்றுக் கொண்டே இருந்தால்........ வெற்றி நிச்சயம்!


37. சிந்தனையில் இருந்து தான்அறிவு தோன்றுகிறது....

சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் போழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்......

அந்த அறிவின் தன்மை நம்முடைய வாழ்க்கையை வளமுடன் வாழ வழி காட்டும்..

சிந்தனை பெருகும் போது நம்முடைய அறிவு 
வளரும்....


38. உங்களுக்காக தங்கள் நேரத்தை ஒதுக்குபவர்களை மதியுங்கள்...

அவர்கள் ஒதுக்குவது நேரத்தை அல்ல வாழ்க்கையின் ஒரு பகுதியை...


39. எரிந்து விழுவதை விட
புரிந்து வாழ்வதில்... 

அதிகம் வாழ்கிறது
அன்பு...


40. எதிர்த்து நிற்பவர்கள் எல்லாம் எதிரியும் இல்லை...

உடன் இருப்பவர்கள் எல்லாம் உறவுகளும் இல்லை...

காலமும் சூழ்நிலைகளும் உணர்த்தும் யார்.. யார் என்று...


41. போட நினைத்த சண்டைகள்...

பேச துடித்த சமாதானங்கள்...

கொண்டாட விரும்பிய சந்தோசங்கள்...

இவையெல்லாம் பெரும்பாலும் மௌனமாகவே கழிய வேண்டிய நிர்பந்தத்தை வாழ்க்கை ஏற்படுத்தி விடுகிறது....


42. உங்களது நம்பிக்கையும் செயல் ஊக்கமும்... எந்த அளவிற்கு வலிமையாக உள்ளதோ... அந்த அளவிற்கு வெற்றி விரைந்து வரும்...


43. கனவு காண்பவர்கள் தோற்பதில்லை.....

ஆனால் கனவு மட்டுமே கண்டு கொண்டு மனக் கோட்டை கட்டுபவர்கள் தான் தோற்கிறார்கள்.....

வருங் காலத்தைப் பற்றியே வருடக்கணக்கில் யோசிக்காமல்  
நிகழ் காலத்தைப் பற்றி நிமிடக் கணக்கிலாவது யோசியுங்கள்.....


44. அவங்க நல்லா இருக்காங்க.. நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று எண்ணாதீர்கள்...

வெளியே சிரிப்பும் உள்ளே வேதனையும் கொண்ட முகமூடி அணிந்த மனிதர்களே இங்கு அதிகம்...


45. கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை...

கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்...


46. தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்
குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்
 
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

 உங்கள் தகுதி தானாகவே உயரும்!


46. நிம்மதியுடன் வாழ்கிறேன் என்று யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை

வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்துவிடுவதில்லை...


47. மனநிலை சரியில்லை என்றாலும் புலம்புகிறோம்...

உடல்நிலை சரியில்லை என்றாலும் புலம்புகிறோம்...

ஆனால் இரண்டும் சரியாக இருந்தால் நம் பேச்சை நாமே கேட்க மாட்டோம்...


48. ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம் கடவுளிடம்...
 
வாழ்வென்பதே வரம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்...


49. சில நேரங்களில் நமக்குப் பிடித்த உறவுகளுக்கு...

துயரமாக இருப்பதை விட. தூரமாக இருப்பதே நல்லது...


50. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுவதே எப்போதும் வலிமைக்கு அடையாளமாகும். 


51. உனக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடமிருந்து விலகி நில் - அது உறவானாலும், நண்பர் ஆனாலும் பொருளானாலும் சரி அதையே நினைத்து வருந்தி உடலையும் மனதையும் வருத்திக் கொள்ளாதே அதனால் பாதிக்கப்படுவது நீ மட்டுமே!!


 52. நிராகரிப்புகளின் மூலம் யாரையும் நிர்மூலமாக்கி விட முடியாது.... உண்மையில் நிராகரிப்புக்கு பின் தான் ஒருவருடைய விஸ்வரூபமே வெளிப்படுகிறது....!!!


53. தன்னைப் போல் தானே எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் என உணர்ந்து தெளிந்த பின் யாரிடமும் கோபமோ பிழையோ கண்டு பிடிக்க மாட்டான்...!!! உணராதவரே உறவையும் நட்பையும் உதறிவிடுகிறார்கள்...!!!


 54. நிஜத்தை விட கனவுகள் அழகாய் இருக்கிறது....ஏனென்றால் அங்கு எந்த ஏமாற்றமும் இருப்பதில்லை... அதனால் தான் கனவுகள் அதிக நேரம் நீடிப்பதில்லை...


55. நம்மிடம் ஒன்று பேசுவதும்... பிறரிடம் ஒன்று பேசுவதும்.. ஒரு சில மனிதர்களின் ரத்தத்தில் ஊறியது . உலகமே தலைகீழாகநின்றாலும் இவர்களை திருத்த முடியாது...!!! அவர்களைப்பற்றி கவலைப்படாதே..


56. வாழ்க்கையில் உயரும் வரை காதை பொத்திக் கொள்ளுங்கள்...

உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்...


57. வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்...

உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால்...

ஒரு துளி எண்ணெய்யை மூழ்கடிக்க முடிவதில்லை...


58. நல்லவர்களின் கடினமான வார்த்தைகள் கூட கசப்பாகத் தான் தெரியும்... ஆனால் நோயைக் குணப்படுத்தும்...

தீயவர்களின் சிரிப்பு விஷம் போன்றது... அது மனிதனை எளிதாகக் கொல்லும்... 


59. கால் நனையாமல் கப்பலில் கடல் கடந்தவர்கள் உண்டு...

ஆனால், கண் நனையாமல் வாழ்க்கையை கடந்தவர்கள் யாருமில்லை...


60 வாழ்க்கை என்பது மெழுகுவர்த்தி போல...

தூரத்தில் இருந்து பார்த்தால் பிரகாசமாக தான் தெரியும்...

அருகில் சென்று பார்த்தால் தான் உருகி கொண்டிருக்கிப்பது தெரியும்...


61. ஏமாறுவதற்கும் ஏமாற்றுவதற்கும் சிறு வித்தியாசம்

ஒருவருக்கு அலட்சியம் மற்றவருக்கு அவசியம்.


62. முள்ளின் திறமையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்...

தன்னைக் காலால் மிதித்தவரைக் கூட தன் கையால் எடுக்க வைக்கிறது...


63. மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது ஆகும்...

மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை...


64. எதிர்நோக்குவது குறைவாக இருந்தால் ஏமாற்றம் மிகுதியாய் ஏற்படாது. எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புகள் தேடி வரும்.


65. எல்லா உறவுகளும் கண்ணாடி போன்றதே..

உடையாத வரை ஒரு முகம்.... ஆனால் உடைந்து விட்டால் பல முகம்.....


66. இப்படி இருந்தால் தான் பிடிக்கும் 
என்று கூறும் அன்பை விட,

எப்படி இருந்தாலும் பிடிக்கும் என்று கூறும் அன்பே சிறந்தது...


67. அனைத்து புயல்களும் மோசமானவை அல்ல...

சில புயல்கள் உங்களுக்கான பாதையை தெளிவாக்கலாம்...


68. இன்பத்திலும் துன்பத்திலும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒரே உண்மை என்னவென்றால்...

இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை...


69. எத்தனை விதமான மனிதர்களோ அத்தனை விதமான மனங்கள். ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.


70. பாதையில் தடைகள் வந்தால் அதை தகர்த்து விட்டுத் தான் செல்ல 
வேண்டுமென்று அவசியமில்லை......

அதை தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பைப் போல......


71. மரக் கிளையில் அமரும் பறவைகள் கிளை உடைந்து விடுமோ என அஞ்சி அஞ்சி உட்காருவதில்லை.....

ஏனெனில் பறவைகள் நம்புவது தனது சிறகுகளை மட்டுமே.......

ஐந்தறிவு கொண்டவைகளே இப்படி 
தன்னம்பிக்கையோடு இருக்கும் போது ஆறறிவு கொண்ட மனிதர்களால் முடியாதா என்ன.......


72. சிரிப்பதற்கு கற்று கொள்ளுங்கள்...

அழுவதற்கு உறவுகள் கற்று தந்து விடுவார்கள்...


73. சாதம் பொங்கும் போது
தீயைக் குறையுங்கள்...

மனது பொங்கும் போது வாயைக் குறையுங்கள்..

இரண்டும் நமக்கு நல்லது...


74. வாழ்க்கையில் நல்லவர் கெட்டவர் என்று யாரும் இல்லை...

மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா நீங்க நல்லவர்...

நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா நீங்க கெட்டவர்...


75. உழைத்துப்பெற வேண்டியது வருமானம்...
 
உணர்ந்து பெறவேண்டியது தன்மானம்...


76. தப்பான உறவுகளை விட நட்பான உறவுகளில் தடம் புரண்டவர்கள் நிறைய பேர். சண்டை போட்டு பேசாமல் இருப்பவர்களை விட பேசினால் சண்டை வரும் என இருப்பவர்கள் நிறைய பேர். 


77. மறைத்துப் பேசுபவர்கள் நல்லவர்களாகவும்...

மனதில் பட்டதை பேசுபவர்கள் கெட்டவர்களாகவும்...

சித்தரிக்கப் படுகின்றனர் இவ்வுலகில்...


78. ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை அல்ல...

ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கை...


79. தொலைந்தும் போகாமல் தொந்தரவாகவும் இல்லாமல்...

தேடும் போது தென்படும் தூரத்தில் இருந்தால் போதும் என்றே முடிகிறது...

ஒரு காலத்தில் நாம் கொண்டாடிய உறவுகள்...


80. எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பது தவறில்லை

எல்லா நேரமும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது தான் தவறு.


81. நாளைய மழையை அறியும் எறும்பாய் இருங்கள்...

நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இருக்காதீர்கள்...


82. இப்ப எல்லாம் யாரும் யாரையும் நல்லவரா கெட்டவரானு பாக்குறது இல்ல...

நாளைக்கு இவர் நமக்கு தேவைப்படுவாரா இல்லையானு தான் பாக்குறாங்க...


83. ரசிப்பதை எல்லாம் அடைய நினைக்கிறோம்...

ஆனால் அடைந்ததை எல்லாம் ரசிக்க மறக்கிறோம்...


84. மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ...

முதலில் அதை நாம் ஒரு முறை மற்றவர்களுக்காக செய்து காட்டுவோம்...


85. உங்களுடைய தோல்விகளுக்கும், பலவீனங்களுக்கும் காரணங்களைத் தேடி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்... 

வெற்றியின் வித்துக்கள் நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்குள் தூவப்பட்டுள்ளன. 

இந்த விதைகளை வளரச் செய்யும் சக்தி உங்களுடையதே... 

உங்கள் வெற்றிக்கு யாரும் பொறுப்பல்ல...

வெற்றியின் விதைகளை வளர்த்தால்.. வெற்றி நிச்சயம்!


86. கடந்து கொண்டே இரு. 
யார் வென்றாலும், தோற்றாலும், பூமி நிற்காது.

உன்னுடைய தனித்துவ பாதையில் நடைபோடு. 

பழி உணர்வை அழித்திடு. 
பசியைப் போக்க உணவை அளித்திடு. 

ஒவ்வொரு நொடியும் கொண்டாடு. 

நட்சத்திரங்களைப் போல் இருந்தாலும் வானத்தின் அங்கமாய் ஒளிர்ந்திடு. வெற்றி நிச்சயம்!


87.வாழ்விலிருந்து அதிகமாக பெறுவதற்கு...

வாழ்க்கைக்கு நீங்கள் அதிகமாக கொடுக்க வேண்டும்...


88. மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்பு கூட்டுகிறீர்களோ...

உங்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கும்...


89. புரிந்து கொள்ளும் அளவிற்கு சிலருக்கு பக்குவம் இருப்பது இல்லை...

புரிய வைக்கும் அளவிற்கு பலருக்கு பொறுமை இருப்பதில்லை...

 
90.கண்ணீர் துளி மதிப்புக்குரியது...

அதை பொய்யான உறவுகளுக்காக வீணடிக்காதீர்கள்...


91. உடல் காயத்திற்கு மருந்து இடுங்கள்...

மன காயத்திற்கு...

அனைத்தையும் மறந்து விடுங்கள்...


92. ஒன்று கடந்து போங்கள்... 

இல்லை என்றால்...

கண்டு கொள்ளாமல் போங்கள்...

அவ்வளவு தான் வாழ்வின் பிரச்சனைகள்...


93. சிந்திக்காத வாழ்க்கை என்றும் சிகரம் தொடுவதில்லை. சந்திக்காத பிரச்சனை என்றும் நம்மை சிந்திக்க வைப்பதில்லை. 


94. வாழ்க்கை என்பது நமக்கு திணிக்கப்பட்ட பாடம் தான்......

அதற்காக அதை வெறுக்காதீர்கள்....

வெறுத்து ஒதுக்குவதால் எந்த 
ஒரு பிரயோசனமும் இல்லை.....

விரும்பிப் படித்துப் பாருங்கள், ஒவ்வொரு பக்கமும் சுவராஸ்சியமாக இருக்கும்..

வாழ்க்கை வாழ்வதற்கே......


95. செருப்புக்கு உள்ளே சிக்கிய கல்
நடக்கும் போது நெருடலாக தான் இருக்கும்... 

மனதுக்கு உள்ளே இருக்கும் கவலை,
வாழ்க்கை பயணத்தை திசை மாற்றி விடும்... 

எதையும் நீ எடுத்துக் கொள்வதில் தான் உள்ளது.


96. நம்மை வெற்றி பெற யாரும் பிறக்கவில்லை என்பது பொய் பிறரை தோற்கடிக்க நாம் பிறந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. 


97. கிழிக்கப்படும் போதுதான் துணி அழகிய உடையாகிறது கசக்கப்படும் போதுதான் வாழ்க்கை சாதனையாக மாறுகிறது.


98. எதையும் எதிர் கொள்வேன் என்ற
மன நிலை நம்பிக்கையைக்
கொடுக்கும்...

என்ன செய்யப் போகிறோம் என்று
யோசிக்காதீர்கள்...

என்ன செய்ய வேண்டும் என்று
யோசியுங்கள்..

வெற்றி உங்களை வந்தடையும்......


99. ஓடினால் தான் அது நதி....
 வீசினால் தான் அது காற்று.....
 பாடினால் தான் அது குயில்.......அதுபோல
பாடுபட்டால் தான் அவன் மனிதன்.
எதிர்பாராத தோல்வியடையும் போது அதைக் கண்டு வருந்தாதீர்கள் அதனால் ஏற்பட்ட படிப்பினையை ஏற்று முன்னேற முயற்சியுங்கள்.


100. உங்களை நிராகரித்த அதே இடத்தில் நிராகரிக்கவே முடியாத சக்தியாக வந்து நிற்பது தான் உங்கள் வெற்றி.


101. வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ அப்படியேதான் உழைப்பும்.


102. நீரின் ஓட்டத்தை 
யாராலும் தடுக்க முடியாது.. 

காற்றின் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.. 

சூரியனின் வெப்பத்தை யாராலும் தடுக்க முடியாது... 

உன் உழைப்பின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது... 

முயற்சித்துக் கொண்டே இரு....
வெற்றி நிச்சயம்!


103. சாதனையில் உலகம் நம்மைத்
தெரிந்து கொள்கிறது......

சோதனையில் உலகை நாம் புரிந்து கொள்கிறோம்.....

ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது..

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுவோம்....

கஷ்டங்கள் வரும் போது் கண்களை மூடினால் உங்களை அது வென்று விடும்....

கண்களைத் திறந்து பாருங்கள், கஷ்டத்தை நீங்கள் வென்று விடலாம்.....


104. தூய்மையான எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும் செயல் புரிந்தாலும் மகிழ்ச்சி அவரை பின் தொடர்ந்து செல்லும்.


105. ஒருவன் அடைவதை கண்டு பொறாமைப்படாதீர்கள்.....
அவன் இழந்தவை தெரிந்தால் அடைய வேண்டும் என்ற ஆசையே வராது உங்களுக்கு.....


106. கடினமான பாதைகளே மிகவும் அழகான இடங்களுக்கு நம்மை கொண்டு செல்கின்றன..

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல.

தன்னுடைய தவறுகளை உணராதவனே குருடன்....

தவறுகள் ஏற்படுவது இயல்பு. அதை திருத்திக் கொள்ளுங்கள்..


107. என்றோ ஒரு நாள் பூக்கும் பூவுக்காக,
நாளும் நீரை ஊற்றி பாதுகாக்கிறோம்...

பூத்து பின்
நிலைத்து இருக்கப் போவதில்லை...

என்றாவது வரும் உன் வெற்றிக்காக உழைத்துக் கொண்டே இரு....

உழைப்பால் கிடைத்த
வெற்றி, நிலைக்காமல் இருக்கப் போவதில்லை....

ஓடிக் கொண்டே இரு.. 
வெற்றி நிச்சயம்!


108. கொஞ்சம் இடைவெளி விட்டு தொடருங்கள,  

நாம் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் மட்டுமல்ல,  உறவுகளையும் தான்.....
.
வாழ்க்கையின் உறவுகள் மேம்பட இது மிகவும் அவசியம்.....

எல்லா உறவுகளும் நீடித்து நிலைக்க வேண்டுமெனில் சிறு
இடைவெளியாவது அவசியம்....


109. கண்களை காக்க
இமைகள் துடித்துக் கொண்டே இருக்கின்றன...

தென்றலை தர இலைகள் அசைந்து கொண்டே இருக்கின்றன...

உணவைத் தேடி,
சிற்றெறும்பு கூட
ஓடிக் கொண்டே இருக்கின்றன...

உன்னைத் தேடி,
உனக்கான பயணத்தில் போய் கொண்டே இரு...

எதையும் தாண்டி, நகர்ந்திடு!...

வெற்றி நிச்சயம்!

Thursday, September 24, 2020

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்.

*"மகாபாரதம்* 
        *உணர்த்தும்*,  
             *உண்மைகள்.”*

 மோகத்தில் 
     வீழ்ந்துவிட்டால்
        மொத்தமாய்
            வீழ்ந்திடுவாய்!
         *சாந்தனுவாய்.!*

 சத்தியம் 
    செய்துவிட்டால்
       சங்கடத்தில் 
         மாட்டிடுவாய்
 *கங்கை மைந்தனாய்.!*

 முற்பகல்  
    செய்யின்
       பிற்பகல்
         விளையும்.
     *பாண்டுவாய்.!*

வஞ்சனை 
    நெஞ்சில் 
       கொண்டால்
         வாழ்வனைத்தும்
                வீணாகும்.
           *சகுனியாய்.!*

ஒவ்வொரு 
    வினைக்கும்
       எதிர்வினை
          உண்டு.
     *குந்தியாய்.!*

குரோதம் 
     கொண்டால், 
        விரோதம் 
           பிறக்கும்.
 *திருதராஷ்டிரனாய்.!*

பெற்றோர்கள் 
    செய்யும் 
      பாவங்கள், 
        பிள்ளைகளை 
          பாதிக்கும்.
  *கௌரவர்களாய்.!*

பேராசை 
     உண்டாக்கும், 
        பெரும் 
         அழிவினையே.
  *துரியோதனனாய்.!*

கூடா நட்பு, 
         கேடாய் 
               முடியும்.
      *கர்ணனாய்.!*

சொல்லும் 
      வார்த்தை, 
         கொல்லும் 
            ஓர்நாள் .
     *பாஞ்சாலியாய்.!*

தலைக்கணம் 
     கொண்டால், 
        தர்மமும் 
          தோற்கும்.
    *யுதிஷ்டிரனாய்.!*

பலம் மட்டுமே, 
     பலன் தராது .
            *பீமனாய்.!*

இருப்பவர் 
     இருந்தால்,  
         கிடைப்பதெல்லாம்
          வெற்றியே.
    *அர்ஜூனனாய்.!*

சாஸ்திரம் 
      அறிந்தாலும், 
         சமயத்தில் 
            உதவாது.
    *சகாதேவனாய்.!*

விவேகமில்லா 
     வேகம், 
        வெற்றியை 
            ஈட்டாது.
    *அபிமன்யூவாய்.!*

 அண்ணனாலும் 
       அரசனாலும் 
           நீதி தவறாத 
               *விதுரனாய்.!* 

தவமும்
     அவமாய் போன 
          *காந்தாரியாய்.!*

பிறருக்கு வழிகாட்டி 
        தன் மகனின் 
             தரம் உயர்த்தா 
           *துரோணராய் .!*

சிரஞ்சீவி
    வரம் பெற்றும்
        சின்னாபின்னமான 
       *அஸ்வத்தாமனாய்.!*

நிதர்சனம் 
     உணர்ந்தவன், 
       நெஞ்சம் 
           கலங்கிடான்.
      *கண்ணனாய்.!.*


           *_வாழ்க்கையும்_*
       *_ஒரு பாரதம்தான்.!_*
          *_வாழ்ந்திடலாம்_*
           *_பகுத்தறிந்து.!_*