Tuesday, December 19, 2023

WHY MY DAUGHTER CAN'T MARRY POOR MAN - ELON MUSK.

Elon Musk explains why his daughter can’t marry a poor man.

Elon Musk with his ten kids

A few years ago there was a conference in the United States on investment and finance. One of the speakers was Elon Musk and during the question and answer session, he was asked a question that had everyone laughing. 

Q : If he, the richest man in the world, could accept that his daughter marry a poor or modest man. 

A : His answer amazed everyone and provoked new thought of change_. 

Elon Musk - First of all, understand that Wealth does not mean having a fat bank account. Wealth is primarily the ability to create wealth.

Example: Someone who wins the lottery or gambling. Even if he wins 100 millions is not a rich man: He is a poor man with a lot of money. That's the reason why 90% of the lottery millionaires become poor again after 5 years.

You also have rich people who have no money.

Example: Most entrepreneurs. They are already on the road to wealth even though they have no money, because they are developing their financial intelligence and that is wealth. 

How are the rich and the poor different?

To put it simply: The rich may die to become rich, while the poor may kill to become rich.

> If you see a young person who decides to train, to learn new things, who tries to improve himself constantly, know that he/she is a rich person.

> If you see a young person who thinks that the problem is the state, and who thinks that the rich are all thieves and who criticizes constantly, know that he is a poor person.

> The rich are convinced that they just need information and training to take off, the poor think that others must give them money to take off.

In conclusion, when I say that my daughter will not marry a poor man, I am not talking about money. I'm talking about the ability to create wealth in that man.

Excuse me for saying this, but most criminals are poor people. When they are in front of money, they lose their mind, that's why they rob, steal etc... For them it is a grace because they don't know how they could earn money by themselves.

One day, the guard of a bank found a bag full of money, he took the bag and went to give it to the bank manager.

People called this man an idiot, but in reality this man was just a rich man who had no money.

One year later, the bank offered him a job as a receptionist, 3 years later he was a customer manager and 10 years later he manages the regional management of this bank, he manages hundreds of employees and his annual bonus exceeds the amount he could have stolen.

"Wealth is first of all a state of mind”.

Attitude is everything! 

Wednesday, October 11, 2023

உண்மையான அன்பு


சர்ச்சையைக் கிளப்பிய ஒரு புகைப்படம் தசாப்தத்தின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை வென்றது. 

அவர்கள் புகைப்படக் கலைஞரிடம் "இந்தப் படத்தை எப்படி எடுத்தீர்கள்?" என்று கேட்டனர். 

அதற்கு அவர் சிறுத்தைகள் ஒரு தாய் மான் மற்றும் அதன் இரண்டு குட்டிகளை துரத்தியது, தாய் மான் அந்த சிறுத்தைகளை விட வேகமாக ஓடியது, அதன் குழந்தைகளால் தாய் மானுக்கு ஈடாக ஓடி வர இயலவில்லை. எனவே அம்மா தனது இரண்டு குட்டிகளும் தப்பிக்க சிறுத்தைகளுக்கு தன்னையே இறையாக கொடுக்க முன் வந்தது. தான் விழுங்கப்படும் போதும் தன் குழந்தைகள் பாதுகாப்பாக ஓடுவதை அந்த தாய் எப்படி சந்தோசமாக பார்க்கிறது என்பதைதான் இந்த புகைப்படம் காட்டுகிறது. தாயால் சிறுத்தைகளிடமிருந்து எளிதில் தப்பியிருக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக, தன் குழந்தைகளுக்காக அது சிறுத்தைகளுக்குத் தன்னையே இறையாக கொடுத்தது. உனக்காக உன் பெற்றோர் எத்தனை தியாகங்களை செய்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதை எத்தனை முறை நிறுத்தியிருப்பாய்? நீங்கள் சந்தோஷமா இருக்கும்போது, சிரித்து, நீங்கள் அழும்போது அழுது வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணிக்கிறார்கள். அவர்களுக்கு வயதாகிறது என்பதையே மறந்து விடுகிறோம், ஒவ்வொரு நாளும் அவர்களின் நேரம் குறைவாக உள்ளது. 

உண்மையான அன்பு நாம் நேசிப்பவர்களுக்காக எல்லாவற்றையும் கொடுக்க வைக்கிறது.

Vetri nichayam

* 1 *
மலையேறும் சுமை தாங்கிகளுக்கு,
முட்டுக்கட்டைகள் தான் முன்னேற்றப் பாதையைத் தருகின்றன.

சிலையாகும் கல்லும்,
உளியின் காயங்களால் தான் உருவாகின்றன...

விலை மதிப்பில்லாத
மானிடப் பிறப்பிலே,
தடைக்கற்களைக் கண்டு தயங்காதே...

தடைக்கல்லை உடைத்து,
உன் பயணத்திற்குப் பாதையாக்கினால்....வெற்றி உறுதி 

* 2 *
விடியாத இரவென்று எதுவுமில்லை. அதைப் போல முடியாத செயலென்று எதுவும் கிடையாது..."

"... விடாமுயற்சிக்கு ஈடு, இந்த உலகில் எதுவுமில்லை. விடாமுயற்சியை தாரக மந்திரமாகக் கொண்டவர்களை தோல்வி நெருங்காது..." 


உங்களை தள்ளி விடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால்….

கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் அவர்களை விட வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்.

* 3 *
நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்..

* 4 *
எந்தப் பறவை தனியாகப் பறக்கிறதோ அதற்குத்தான் வலிமை அதிகம்.

* 4 *
தூரம் என்பது முக்கியமல்ல. எடுத்து வைக்கின்ற முதல் அடி தான் முக்கியம்.

* 5 *
வரலாற்றில் எல்லோருக்கும் பக்கங்கள் உண்டு. அதை நிரப்புவதும் காலியாக வைத்திருப்பதும் அவரவர் கையில் உள்ளது.

* 6 *
விடியாத பொழுதும் இல்லை…
முடியாத செயலும் இல்லை…

நம்பிக்கை உடையவனுக்கு 
தோல்வி ஒரு தொடக்கம்…

நம்பிக்கை இல்லாதவனுக்கு 
தோல்வி ஒரு முடக்கம்…

துணிந்து செயல்படுங்கள்..
வெற்றி கிடைக்கும் வரை…

* 7 *
நேற்றைய நாட்கள் நம்மிடம் இல்லை.... நாளைய நாட்களும் நம் கையில் இல்லை... நம்மிடம் உறுதியாக இருப்பது இன்றைய நாள் மட்டுமே. அதை வீணடிக்க கூடாது.

* 8 *
இந்த உலகில் எந்த மேதையும் தோல்வி காணாமல் வெற்றியை கண்டதில்லை...

எந்த சாதனையாளரும் சோதனை இன்றி சாதனை புரியவில்லை...

* 9 *
விரிக்காத வரை சிறகுகள் பாரம்தான் விரித்துப் பார்த்தால் வானம் கூட தொடுதூரம்தான்.

* 10 *
கற்றது ஒரு மடங்கு என்றால் அதை நடைமுறை வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக ஆக்க பொது அறிவு பத்துமடங்கு தேவை.

* 11 *
மனிதன் சிரிக்கக் கூடிய நிலையில் இருக்கும் வரை, அவன் ஏழையாக மாட்டான்.

* 12 *
மனிதன் எதை தொடர்ந்து நினைக்கிறானோ, அதை அவன் அடைந்தே தீருவான்.

* 13 *
சில நேரங்களில் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட 

நம் வழியில் நாம் தனியாக செல்வதே சிறந்தது..!

* 14 *
நீந்தினால் தான் நீச்சல் வரும்,
வரைந்தால் தான் ஓவியம் வரும்,

பேசினால் தான் மொழி வரும்,
எழுதினால் தான் எழுத்து வரும்,

முயற்சித்தால் தான் வெற்றி வரும்.
தயங்கித் தயங்கி நின்றால் எல்லாம் தூரமே.

* 15 *
 உங்கள் குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்...

 ஒருநாளும் நியாயப்படுத்திக் கொள்ளப் பழகாதீர்கள்.

* 16 *
தோற்று விடுவோம், இழந்து விடுவோம் என்று இருந்து விடாதீர்கள்.

தோற்றாலும் இழந்தாலும்
அது பாடம்.

முயற்சியே செய்யாமல் இருந்தால், அது பாவம்.

* 17 *
மனதில் உறுதியில்லாவிட்டால், நீங்கள் நல்லவராக இருப்பதும் கூட கடினம் தான்.

* 18 *
உழைப்பு உடலை பலப்படுத்தும். கஷ்டங்கள் உள்ளத்தை பலப்படுத்தும்.

* 19 *
ஆசைகளை அடக்க வேண்டியதில்லை, அதை சீரமைப்பது தான் முக்கியம்.

* 20 *
கற்றுக் கொள்ளும் மனம் இருந்தால், நீங்கள் முட்டாளிடம் இருந்தும் கூட பாடம் கற்றுக் கோள்ள முடியும்.

அந்த மனம் இல்லையென்றால், 
உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

* 21 *
சோதனையை கொடுத்த கடவுளுக்கு வெற்றியை கொடுக்க ஒரே ஒரு நொடி போதுமானது.

தெளிவாக இருங்கள்…
முயற்சியை கை விடாதீர்கள்..
உங்களுடைய இலக்கில் கவனமாக இருங்கள்.
வெற்றி நிச்சயம்.

* 22 *
உண்மையான உள்ளத்தைக் காயப் படுத்தியவர் எவராயினும், பொய்யான உறவிடம் தம் அழிவினைச் சந்திப்பார்கள்.

* 23 *
தங்களுடைய தவறுகளை உணராதவர்களை திருத்தி விடலாம்.

ஆனால் அதை நியாயப் படுத்துபவர்களை ஒருபோதும் திருத்த முடியாது.

* 24 *
உங்கள் அடையாளத்தை, அச்சுறுத்தும் கோபத்திலோ, அளவில்லா அடக்கு முறையிலோ, கருணை இல்லா அதிரடியிலோ வைக்காதீர். அன்பினால் பூத்திடும் புன்னகையில் வைத்திடுங்கள்.

* 25 *
ஆசையை சுமக்காமல் அன்பை சுமந்து செல்லுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் அன்பு
மழை பொழிந்து கொண்டு இருக்கும்.

* 26 *
மனிதன் சிறந்து வாழ உழைப்பு வேண்டும். 

மனிதம் நிலைத்து நிற்க அர்ப்பணிப்பு வேண்டும்.

தீய மனிதர்கள், அச்சத்தால் அடங்கி நடக்கின்றனர்.

நல்ல மனிதர்கள், அன்பால் அடங்கி இருக்கின்றனர்.

* 27 *
யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கி விட்டு அவர்கள் அனைவரும் ஒன்றாகி விடுவார்கள்.

* 28 *
நாம் செய்யும் தொழில் - சம்பாத்தியத்திற்க்காக மட்டுமே அல்ல,  உண்மையில் அதை தலை சிறந்த சேவையாகவும் மாற்றுவதுதான் மனிதனின் தலையாய் கடமையாகும்.!
-கௌதம புத்தர்.

* 29 *
வேதனையை சகித்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.

விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.

வணங்க ஆரம்பிக்கும் போதே,மனிதன் வளர ஆரம்பிக்கிறான்.

*30*
உள்ளம் மாசின்றி இருக்கும்போது, காணும் அனைத்தும் களங்கமின்றி காட்சி அளிக்கும். 

அதுபோல இறைவனை நம்பி பயணிப்பவர்களுக்கு பயமும் பாரமும் பனிபோல் விலகும்.

இழந்ததை நினைத்து வருந்தாதீர்கள். எதை நீங்கள் இழந்தாலும் அது, இன்னொரு வடிவில் உங்களை வந்துசேரும்.

உங்கள் கவலையை பெற்றுக்கொள்ளும் இடத்தில் இறைவன் இருக்கிறார் அவரிடம் கொடுத்து விடுங்கள்.

இறைவன் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களை அக்கறையோடு காத்து வருகிறார். என்றும் அவர் பாதம் பணிந்திருங்கள்.

*31* 
உங்களை விடச் சிறந்த மனிதர்கள்......!!

உங்களை ஒரு போதும் குறைத்துப் பேசுவதில்லை......!

*32*
அழகுக்கும் நிறத்திற்கும் சம்பந்தமில்லை.

எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே.!

*33*
சிரித்துக் கொண்டே கத்தியால் குத்தும் மனிதர்களைத் நான் இன்றைய உலகம் விரும்புகிறது, நம்புகிறது.

கடுகடுவென உண்மையை பேசும் நேர்மையான மனிதர்களை அடியோடு வெறுக்கிறது.

*34*
சர்க்கரை போல இருக்காதீர்கள்;

உப்பைப் போல இருங்கள்.

அனைவருமே உங்களை அளவோடு பயன் படுத்திக் கொள்வார்கள்.


*35* 
யாரையும் உங்களின் தேவைக்காக பயன் படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடாதீர்கள்.

ஏனெனில் உங்களின் வாழ்க்கை இன்னும் முடிந்து போகவில்லை.

சிந்தித்து செயல் படுங்கள்.
இதுவும் கடந்து போகும்.


*36*
ஆள் பார்த்து கூலி கொடுப்பவன் மனிதன்..

ஆடிய ஆட்டத்திற்கு எல்லாம் கூலி கொடுப்பவன் இறைவன்...


*37*
எதிரில் இருப்பவர்களைப் பார்த்து புன்னகை செய்வதற்காக மட்டுமே உங்கள் உதடுகளை பயன் படுத்துங்கள்.

அவர்களை காயப் படுத்துவதற்காக உதடுகளை பயன் படுத்தாதீர்கள்.

*38* 
சோதனையில் உள்ள கொம்பினை நீக்கினால் சாதனை, என்ற வார்த்தை கிடைக்கும். அதைப்போல, வாழ்வில் நான், என்னும் கொம்புடைய எண்ணத்தை மனதில் இருந்து நீக்கினால் சாதனை படைக்கலாம்..."

"... ஒருவன், சந்தோஷம் வரும் போது சிந்தனை செய்வதில்லை. அது போகும் போது தான் சிந்தனை செய்கிறான்..."

"... பதற்றமில்லாமல் இருப்பது தான் வெற்றிக்கு வழி..."

 
*39*
சிறப்புக்குரிய கொள்கைகளை போற்றிட தவறாதீர்கள்..."

"... சிந்தனைக்குரிய எண்ணங்களை கொடுத்திட தவறாதீர்கள்..."

"... வெற்றிக்குரிய வழிமுறைகளை கற்றிட தவறாதீர்கள்..."

"... புகழுக்குரிய காரணங்களை தக்க வைத்திட தவறாதீர்கள்..."


*40*
வாய்ப்புகள் விலகிப் போவதை எண்ணி கலங்கி நிற்காதீர்கள்.

எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து விடாமுயற்சி செய்யுங்கள்.

நீங்கள் இழந்ததை விட பெரிய வெற்றி உங்களுக்காக காத்திருக்கும்.

*41*
திறமையற்றவர் என்று யாரும் இல்லை. ஆனாலும், சிலர் தோல்வி அடைவதற்கு காரணம், அந்த திறமையை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதே..."

"... தோல்வி என்பது வீழ்ச்சியல்ல, படிப்பினை..."

"... நம் செயல்களில் நேர்த்தி இருக்குமானால், வெற்றி நம்மை மட்டும் தான் தேர்ந்தெடுக்கும்..."


*43*
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று வருந்துவதை விட,

இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று விலகி விடுவதே நிம்மதி.


*44*
நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட 

அவர்களின் புரிதல் என்னவோ அவர்கள் விருப்பப் படியே நடக்கட்டும் என மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி.

தவறான புரிதல் இருக்கும் இடத்தில் சொல்லப்படும் எந்த ஒரு விளக்கமும் அர்த்தமற்றதே.


*45*
திறந்த மனதோடு மட்டுமே நம் வாழ்க்கை முழுவதும் நாம் பயணப்பட வேண்டும்.

அவ்வாறு பயணப்படத் தயங்கினால், திரும்பிய திசைகளில் எல்லாம் மூடிய கதவுகளை மட்டுமே நாம் பார்த்து திகைக்க வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டுவிடும்..."


*46*
தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும் தான் சரி என்று வாதாடுபவர்கள் மத்தியில்,

அமைதியை மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள். 

அவர்களுக்கு புரியவைக்க காலம் ஒன்று உள்ளது.

சிந்தித்து செயல்படுங்கள். 

இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.


*47*
மனிதர்கள் நல்லவர்களை நம்புவதில்லை. 
நல்லவர்கள் போல் நடிப்பவர்களைத் தான் நம்புகிறார்கள். 
கர்ணன் துரியோதனனை நம்பியதைப் போல.

பொய்களை மட்டும் காரணம் கேட்காமல் நம்பிவிடுகிறார்கள், உண்மைகளை நிரூபிப்பதற்குத்தான் ஆதாரம் கேட்கிறார்கள்.

வெட்டியானுக்கு வேண்டியது எல்லாம் சடலம் மட்டும் தான் மனிதன் அல்ல.
நீதிபதிக்கு வேண்டியது எல்லாம் சாட்சி மட்டும்தான் உண்மை அல்ல.

ஏமாளி என்னும் பட்டம் இப்போதெல்லாம் விட்டுக் கொடுப்பவர்களுக்கே             பரிசளிக்கப்படுகிறது.


*48*
கடவுள்தன்மை என்பது எது?
 நாம் சரியானவற்றை செய்யும்போது ஏற்படும் மன நிறைவு, தவறானவற்றைச் செய்யும் போது ஏற்படும் குற்ற உணர்வு..
 இவைதான்
 கடவுள்தன்மை..."

"...எதை செய்தாலும் முழு மனதுடன் செய்வோம்.
 பலன் கிடைக்காவிட்டாலும் மன நிறைவு கிடைக்கும்..."

"...நமக்கென்ன குறை. என்ற பெருமிதம் தான் நமக்கான மனநிறைவு..."

*49*
மனித வாழ்வே ஒரு விசித்திரமானது.

இங்கு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களை விட பொறுத்துக் கொண்டு வாழ்பவர்கள் தான் அதிகம்....

நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுவது தான் வாழ்க்கை.

*அன்புடன் இனிய காலை வணக்கம்.*

Thursday, August 3, 2023

Monday, July 31, 2023

TV Ajay Babu Retirement

Felistating T.V.Ajay Babu garu on his superannuation on 31.07.23.

With Team Servo on his Super Annuation.


Thursday, July 6, 2023

கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழி செவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Friday, May 5, 2023

Crisda Rodriguez

உலகப்புகழ்பெற்ற டிசைனர் Crisda Rodriguez சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்..  மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.!  என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!  அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை... உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !  தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்....  எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை... எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை...ஆனால் சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !  இவ்வளவு தானுங்க வாழ்க்கை... யாருக்கும் உதவாத... வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்....💔

Thursday, January 26, 2023

74th Republic Day

பாலம் கல்யாண சுந்தரம்.


பாலம் கல்யாண சுந்தரம்.

இந்திய அரசின் ‘இந்தியாவின் சிறந்த நூலகர் விருது பெற்றவர்..

சுபாஷ் கலியன் இயக்கியத்தில் வெளியான "பாலம் கல்யாணசுந்தரம்" பற்றிய ஆவணப்படம், 2012 ஆண்டு நடைபெற்ற மூன்றாவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்குத் தேர்வானது

பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?.

35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.

உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகூறி விட்டு திரும்பினார்.

ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.ஆனால் இதை எதையும் தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளாதவர்

ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.

ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.

பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.

கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்..

இத்தகைய உத்தமருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான  பத்ம ஸ்ரீ விருதை அளித்து மத்திய அரசு பெருமை தேடி கொண்டுள்ளது.

Tuesday, January 24, 2023

SWBC - Boot Camp

Induction Introduction 

Day -1.  
Meditation       Lesson

Day -2.
Meditation       Lesson

Day -3.
Meditation       Lesson

Day -4.
Meditation       Lesson

Saturday, January 14, 2023

தைப்பொங்கல் 2023


பச்சரிசி பால் பொங்கல் 
பானையில் பொங்கிட... 
அச்சு வெள்ளம் செங்கரும்பாய் 
வாழ்க்கையும் இனித்திட... 

கதிராடும் நெல்மனிகள் 
களத்தினில் குவிந்திட... 
கொத்துமஞ்சள் நெல்மனிகள் 
உறவுகள் பகிர்ந்திட... 

ஆடு மாடு கலப்பைஎல்லாம் 
அதிகமாய் பெருகிட... 
கவலையெல்லாம் கனவைப்போல் 
காணாமல் போயிட... 

ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும்
உழவர்கள் அனைவரும் 
ஓரிருநாள் ஓய்ந்து கொண்டாடும் 
பொங்கல் திருநாளில் 

உங்கள் மனம் மகிழ்ச்சியில் பொங்க...
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.