Monday, May 18, 2020

சிந்தனை துளிகள் - 1

என் பள்ளித் தோழன் திரு.குமார் ராஜாவின் இனிய காலை வணக்கம் குறுஞ்செய்தி வாழ்த்துக்களின் தொகுப்பு..

1. நம்மை பிறர் எப்படி எண்ணுகிறார்கள் என்பதை விட

நம்மை நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே முக்கியம்!


2. நாம் சரியாக இருந்தால் கோபப்படுவதற்கு அவசியமில்லை...

தவறாக இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை...


3. காலங்களும் மாற்றங்களும் மாறி கொண்டே தான் இருக்கும்...

ஆதலால் எந்த ஒரு வெற்றியும் நிரந்தரம் அல்ல...

எந்த ஒரு தோல்வியும் நிலையானது இல்லை...


4. துன்பம்  வரும் போதும் இன்பம் வரும் போதும்...

கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டுமே...


5. எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்பது முக்கியம் இல்லை...

நம் வாழ்வில் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன்  உண்மையாக இருக்க எத்தனை மனிதர்களை சம்பாதித்தோம்  என்பதே முக்கியம்...
  

6. எல்லோரையும் நம்பிக் கொண்டே இருக்காதீர்கள்... 

ஏனென்றால் 

சிலருக்கு மட்டும் தான் நம்பிக்கையை காப்பாற்றும் பழக்கம் இருக்கிறது... 


7. வாழ்க்கையில் சில வலிகள் இருந்தால் தான்... 

அதில் இருந்து மீள  பல வழிகள் தோன்றும்...


8. எத்தனை கைகள் உங்களை  தள்ளி விட்டாலும்...

உங்கள்  தன்னம்பிக்கை ஒரு போதும் உங்களைக்  கைவிடாது...


9. விடா முயற்சி என்ற ஒற்றை நூல் மட்டும் சரியாக இருந்தால்...

வெற்றி என்னும் பட்டம் நம் வசமே இருக்கும்...


10. உங்கள் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளும் போது...

உங்களின் மன வலிமையும்... தன்னம்பிக்கையும்... தானாகவே அதிகரிக்கிறது...


11. யாரோ சொன்னார்கள் என்பதற்கெல்லாம் மனதைத் தளர விடாதீர்கள்...

உங்களுக்கான வாழ்க்கை எதுவோ அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருங்கள்...


12. தேவைக்கு மட்டும் உறவாடும் உறவை விட 

தேவைக்கு மட்டும் ரத்தம் குடித்துவிட்டுப் போகும்  கொசுக்களே மேல் 

என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டு செல்கின்றன சில உறவுகள்...


13. ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே...

பக்குவமாக அதில் இருந்து மீண்டு விட்டால்... வாழ்வின் நிலையை நாம் கற்றுக்கொள்ளலாம்... 


14. யாரையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதீர்கள்...

அது உங்கள்  நிம்மதியைத் தொலைக்க  வைக்கும்...

காலம் அதன் கடமையைக் கச்சிதமாகச் செய்யும்...

அதை நீங்களே காண்பீர்கள்...


15. நிறைய சிரித்து பாருங்கள்... கவலைகள் குறையும்...

சிறிது சிந்தித்து பாருங்கள்... கவலைகள் மறைந்து விடும்...


16. வாழ்க்கையில் தடுமாற்றம் வரலாம் 

ஆனால்  மனம் தடுமாறினால் உங்கள்  வாழ்க்கையே தடம் மாறிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்...


17. ஒருவரை விரும்பும் போது நல்ல குணங்களையும்...

அவரை வெறுக்கும் போது கெட்ட குணங்களையும்...

மட்டுமே பார்ப்பது மனித இயல்பு...


18. வாழ்க்கையில் நமக்கான அடையாளத்தை 

நாம் உருவாக்கியதாக இருக்க வேண்டும்...

பிறர் கொடுத்ததாக இருக்க கூடாது...


19. உயிர் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் போதும்...

வாழ்க்கையில் எவ்வாறு வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்...


20. வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்கள்...

பின் வாங்காமல் செல்கிறோம் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்...


21. எதிர்பார்ப்பதை விட எதிர்கொள்வதை கற்றுக்கொள்ளுங்கள்...

ஏனெனில், இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கையை விட...

எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது...


22. பல நல்ல தொடக்கங்களுக்கு...

சில தைரியமான முடிவுகளே காரணமாக இருக்கும்...


23. பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாமலும்...

வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும்...

தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும்...

இருந்தால்... நம் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்...


24. உங்களுக்கானது எதுவோ அதை நிச்சயம் அடைந்தே தீருவீர்கள்...

எதை நீங்கள்... கொடுக்கிறீர்களோ அது உங்களிடமே பல மடங்காக திரும்பி வரும்...


25.வார்த்தைகள் என்பது ஏணியை போன்றது...

நீங்கள் பயன்படுத்துவதைப் பொறுத்து...

ஏற்றியும் விடும்...

இறக்கியும் விடும்...


26. அவரவர் உடலின் அழகை கண்ணாடி காட்டுவது போல...

அவரவர் உள்ளத்தின் அழகை அவர்களின்  சொல்லும் , செயலுமே வெளிப்படுத்துகிறது...


27. இவர்கள் ஏன் இப்படி என்று எண்ணுவதை விட...

இவர்கள் இப்படித்தான் என்று கண்டு கொள்ளாமல் செல்வதே...

சில சமயங்களில் நமக்கு நன்மையைத் தரும்...


28. நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுகிறது....


29. உன்னால் முடியும் என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...


30. பிறரின் நிழலிலேயே வாழ பழகி  விடாதீர்கள்...

பிறகு  உங்களின் நிஜம் மறந்து விடும்..


31. குத்தி காட்டுகிற மனிதனாக இருந்தாலும் சரி...

குத்தி கிழிக்கின்ற முள்ளாக இருந்தாலும் சரி...

தூரமாக தூக்கி போடுறது தான் நல்லது...


32. மீண்டும் ஒருமுறை முகம் பார்த்து பேச வேண்டியிருக்குமே என்ற ஒரு  காரணத்திற்காகவே

நம்முடைய நிறைய கோபங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன...


33. நற்செயல்களுக்கான வெகுமதிகள் உடனே வருவதில்லை...

அது எவ்வளவு தாமதமாக வந்தாலும் நிலைத்து நிற்கும்...


34. எதிர்பார்ப்பதை நிறுத்தி விட்டு...

ஏற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்...

வாழ்க்கை எளிதாக மாறிவிடும்...


35. அதிகம் விட்டுக்கொடுத்து போறவர்களிடம்...

உங்கள் சக்தியை காமிக்காதீங்க...

முடிஞ்சா அவங்க ஏன் உங்களுக்காக விட்டுக்கொடுத்து போறாங்கனு யோசிங்க.


36. வீசுகின்ற வாசனையை பொறுத்து தான் மலர்கள் மதிக்கப்படுகின்றன...

அதே போல, பேசுகின்ற வார்த்தைகளை பொறுத்து தான் மனிதர்கள் மதிக்கப்படுகின்றனர்...


37. இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து நாளையைத் தீர்மானித்து விடாதீர்கள்..

ஏனென்றால் உங்களை உருவாக்கிய கடவுளுக்கு உங்கள்  நிலையை மாற்ற ஒரு வினாடி போதுமானது...


38. நினைப்பதை சரியாக மட்டும்  நினைத்து பாருங்கள்...

நடப்பதும் சரியாகவே நடக்கும்...


39. நன்மை செய்தாலும் சரி... கெடுதல் செய்தாலும்  சரி...

நாம் செய்த செயல்களின் பலன்களை அடைந்தே ஆகவேண்டும்...

இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை...


40. நல்லவனிடம் கண்ட ஒரு  தவறுக்காக அவனை விட்டு விலகாதே....

கெட்டவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனிடம் சேராதே...


41. சிறந்த உறவுகள்  கண்ணாடியும், நிழலும் போல...

கண்ணாடி பொய் சொல்லாது...

நிழல் நம்மை விட்டு விலகாது...


42. மற்றவர்களின்  மனதை நோகடித்து விடாமல் பார்த்து பார்த்து வாழ்பவர்கள் தான்...

அவ்வப்போது மற்றவர்களால் மனம் நோகடிக்கப் படுகிறார்கள்...


44. நினைத்த வாழ்க்கை எல்லோருக்கும்
வாழக் கிடைப்பதில்லை...

கிடைத்த வாழ்க்கையை சில பேருக்கு
வாழத் தெரியவில்லை...


45.பிறரிடம் இருந்து எழுப்பப்படும் தவறான கேள்விக்களுக்கு...

சரியான பதில் மௌனம்...


46. எந்தவொரு பெரிய அடிகளும் வெற்றியை தீர்மானிப்பதில்லை....

 நிறைய சிறு சிறு அடிகளே வெற்றியை தீர்மானிக்கின்றன.!


47. ஒவ்வொரு சம்பவத்துக்கும் மூன்று முகம் இருக்கும்...

உங்களுக்குத் தெரிந்தது...

பிறருக்கு தெரிந்தது...

உண்மையில் நடந்தது...


48. துணிவு உங்களை உழைப்பில் 
உயர வைக்கும்...

பணிவு உங்களை பிறர் மனதில்
உயர வைக்கும்...


49. காயங்கள் இல்லாமல் கனவு வேண்டுமானால் காணலாம்...

ஆனால், வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது...


50. அழகாய் அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல...

நமக்கு அமைவதை அழகாய் மாற்றுவதே  
வாழ்க்கை...


51. எல்லா மாற்றமும் ஏதோ ஒரு...

ஏமாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது...


52. எதுவுமே நிரந்தரம் இல்லை என்று நாம் உணரும் நேரம்...

நம் கையில் எதுவுமே
இருக்கப்போவது இல்லை...

வலிகளையும்
வடுக்களையும் தவிர...


53. இன்பமும் துன்பமும் வாழ்வில் அடிக்கடி வந்து செல்லும் பேருந்துகள்...

எதில் ஏறி பயணிக்க வேண்டும் என்பதை  நாம் தான் தீர்மானிக்க வேண்டும்...


54. சந்தோஷமா இருக்க ஒரே வழி...

உங்களுக்கு மரியாதை எங்கு இல்லையோ...

அங்க அப்படியே சத்தமில்லாம விலகி போயிருங்க...


55. உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும்...

இறைவன் உங்களிடம் கொடுப்பதில்லை...


56. நீங்கள் விழும் பொழுது முதலில் உதவி செய்பவர்...

ஏற்கனவே, அந்த வலியை உணர்ந்தவராக இருப்பார்...
 

57. தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை  என்றால்...

அது தான் உண்மையான தோல்வி
 

58. கொடுப்பது சிறிது என்று தயங்காதீர்கள்...

வாங்குபவர்க்கு அது பெரிது...

எடுப்பது சிறிது என்று எடுக்காதீர்கள்...

இழப்பவர்க்கு அது பெரிது...


59. நீங்கள் சொல்வது பொய்யென தெரிந்தும் பொறுமை காப்பவர்கள் ஏமாளிகள் அல்ல...

உங்களை இழந்து விட கூடாது என்று நினைப்பவர்கள்...


60. நடத்தையும் எண்ணமும் சரியாக இருந்தால்...

நீங்கள் போகுமிடமும் சந்திக்கும் நபரும் வெகு தொலைவில் இல்லை...


61. தன் தவறை உணர்ந்தவர்களை திருத்தி விடலாம்...

அதை நியாப்படுத்துபவர்களை., ஒரு போதும்... முடியாது.


62. உப்பும் அன்பும் ஒன்று தான்...

அளவோடு செலுத்தும் வரை தான் சுவை...

அள்ளி தெளித்தால் குப்பையில் தான்...


63. வாய்ப்பை இழந்தோர் வருத்தப் படுகிறார்கள்

வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்

வாய்ப்பை உருவாக்குவோர்
வெற்றி பெறுகிறார்கள்...


64. கடிகாரம்.

காத்திருக்கும் போது மெதுவாக நகரும்...

தாமதமாகும் போது வேகமாக நகரும்...

சோகத்தில் நகராது...

மகிழ்ச்சியில் போவது தெரியாது...

நேரம் நம் மனதை பொறுத்தது...


65. செய்த தவறை நியாயப்படுத்த
முயற்சி செய்வதை விட...

அடுத்த தவறு நடக்காமல் இருக்க
முயற்சி செய்வோம்...


66. எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விஷயங்களை...

அதன் இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதற்கு பெயர் தான்...

பக்குவம்...


67. ஒருவர் தன் வாழ்வில் முன்னேற நல்ல புத்தகம் தேவை இல்லை...

அவரவர் அப்பாவின்  'வாழ்க்கை அனுபவம்' புத்தகம் ஒன்றே போதும்


68. வசதியை வைத்து எந்த ஒரு  உறவையும்  தாழ்வாக கருதாதீர்கள்...

ஏனெனில் வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.. நொடியில் அனைத்தும் மாறிவிடும்...


69. உதட்டிற்கும் உள்ளத்திற்கும்
இடையே உள்ள தூரத்தை குறையுங்கள்

இல்லையேல்

வாய் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும்
இடையே கடப்பதிலேயே
 நாட்கள் கடந்து விடும்...


70. சிலரை மறந்து விடுங்கள்..
சிலரை மன்னித்து விடுங்கள்...
சிலரை கடந்து விடுங்கள்...

எவரையும் தூக்கி சுமக்காதிர்கள்...
உங்கள் வாழ்க்கை சுமையாகிவிடும்...


71. தண்ணீர் அமைதியாயிருக்கும் போது தூசிகள் அடியில்
தானாகவே தங்கிவிடும்

வாழ்க்கையில்
பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள்...தானாகவே அடங்கி விடும்...


72. கொதிக்கின்ற நீரில்
பிம்பங்கள் தெரியாது

அதுபோல் கோபத்தில்
உண்மை தெரியாது

ஆகையால் ஆலோசித்து முடிவெடுங்கள்...


73. ஒரு விஷயத்தை பற்றி நாம் யோசிக்க வேண்டுமென்றால் அதற்கு மதிப்பு இருக்க வேண்டும்...

தகுதி இல்லாத ஒன்றை பற்றி யோசித்து நம் நிம்மதியை இழந்து விடக்கூடாது...


74. தவறை மன்னித்துவிட்டோம்
என்பதை விட...

மறந்து விட்டோம் என்பதே உறவை பலப்படுத்தும்...


75. பெற்ற தாயை மதித்துப் போற்றுங்கள்...

தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறு எங்கும் இருக்க முடியாது...


76. கைதட்டுபவர்களுக்கும்
கைதட்டல் வாங்குபவர்களுக்கும்

பெரிய வித்தியாசமில்லை
முயற்சியை தவிர...


77. மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும் போது "ஒரு வேளை முடியலாம்" என்று உங்களுக்குள் மெலிதாக குரல் கேட்குமே அதற்கு பெயர்தான் "நம்பிக்கை".


78. முடியாது என்று எதையும் விட்டுவிடாதீர்கள்...

முடியும் என்று அலட்சியமாக இருந்தும் விடாதீர்கள்...

உயர்ந்தாலும்... தாழ்ந்தாலும்...

முயற்சி செய்து கொண்டே இருங்கள்...


79. ஓடும் நீர் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்யுங்கள்...

தீயவை தானாக குப்பை போல் ஓரமாக ஒதுங்கி விடும்...


80. விமர்சனங்களால் சிதைந்து விடாதீர்கள்...

உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள்...

அது உங்களின் விவேகத்தை வேகப்படுத்தும்...


81. கவலையை நினைத்து கண்ணீர் சிந்தாதீர்கள்...

லட்சியத்தை நினைத்து வியர்வை சிந்துங்கள்...

முன்னேறிவிடலாம்...


82. உண்மையில் இறைவன் கை கொடுப்பதும் இல்லை... கை விடுவதுமில்லை...

நாம் செய்த நன்மைகளே  நமக்குக் கை கொடுக்கின்றன...

நாம் செய்த பாவங்களே நமக்குக் குழி பறிக்கின்றன...


83. தெரிந்தவரிடம் மட்டுமே 
புன்னகையை பகிர முடியும்...

புரிந்தவரிடம் மட்டுமே
கண்ணீரை பகிர முடியும்...


84. ஏமாற்றுவது என்பது நம்பிக்கையை  உடைக்கும் செயல் ஆகும்...

இங்கு ஏமாறுபவர்கள் ஒரு மாற்றதை மட்டுமே சந்திக்கிறார்கள்...

ஆனால், ஏமாற்றுபவர்கள் இழப்பை சந்திக்கிறார்கள்...


85. உலகில் விலைமதிப்பில்லாதது உண்மையான அன்பு...

அது விலையில்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பு பலருக்கு புரிவதில்லை...

86. வாழ்க்கையில் நமக்கு  இரண்டு வாய்ப்புகள் உள்ளது...

ஒன்று உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வது...

மற்றொன்று ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றிக் காட்டுவது...


87. சில உறவுகளிடம் என்ன என்றால் என்ன என்று இருப்பது நல்லது...

அதிக அக்கறை காட்டினால் அவமானம் தான் மிஞ்சும்...


88. கோபத்தில் எடுத்தெறிந்து பேசும்
சிலருக்கு ஒரு குணம் இருக்கும்...

அவர்கள் பிறருக்கு ஒருபோதும் துரோகம் செய்யவே மாட்டார்கள்


89. வாழ்க்கை மிகவும் சிறியது.

முடிந்த வரை சந்தோசமாக இருக்க முயலுங்கள்...

வேகமாக மன்னியுங்கள்...

மெதுவாக கோபத்தை வெளிப் படுத்துங்கள்..

உங்களை புன்னகை செய்ய வைக்கும் எதையும் இழக்காதீர்கள்....


90. போதும் என்ற மனம் மட்டும் உங்களுக்கு இருந்தால்...

நீங்கள் தான் இந்த உலகில் நிம்மதியாக இருப்பவர்.


91. விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை.

கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன.

அதைப்போலதான் மனித வாழ்வு

தடுமாறும் போதும் தடமாறும் போதும் முன்னேறி முளைத்து எழுவோம்.


92. பிறருக்கு கொடுக்கும் நிலை நம்மிடம் இல்லை என்றாலும்...

பிறரை கெடுக்கும் நிலையை ஒருபோதும் நாம் செய்யக்கூடாது...


93. எந்த நிலையிலும் உங்கள் மனதை  அமைதியாக வைத்திருக்க பழகுங்கள்...

அமைதியை விட நல்ல
ஆதரவும் இல்லை...
ஆறுதலும் இல்லை...


94. அதிவேகமாக குதிரை மேல் சவாரி செய்பவரைப் பார்த்து எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால்...

எனக்குத் தெரியாது குதிரையைக் கேள் என்பது போல

நம் நிலையும் அது தான்...


95. கொடுப்பதற்குரியது பணம் மட்டுமல்ல...

உங்கள்  வார்த்தை ஒருவருக்கு தாகம் தணிக்கலாம்...

உங்கள் புன்னகை ஒருவர் உள்ளத்தில் விளக்கேற்றலாம்...

உங்கள் அன்பு ஒருவரை மனிதனாக வாழவைக்கலாம்


96. காலையில் கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு இரை கிடைக்கும் இடம் தெரிந்தா பறக்கிறது

தூரம் என்று எந்தப் பறவையும் சொல்வதில்லை

மழை வந்தாலும் மற்ற கூடுகளுக்குச் செல்வதில்லை

உலகம் பெரியது. வாழ்க்கையை கண்டு பயப்பட வேண்டாம்...


97. மனதிற்குக் காரணம் சொல்லிப் பழக்காதீர்கள்

நீங்கள் நம்பு என்றால் நம்ப வேண்டும்... நீங்கள் விடு என்றால் விடவேண்டும்

இல்லையெனில் அது தேவை இல்லாதவற்றுக்கு காரணம் கேட்டு உங்களை குழப்பும்.


98. வீசுகின்ற வாசனையைப் பொறுத்து தான் மலர்கள் மதிக்கப் படுகின்றன...

அதேபோல்...

பேசுகின்ற வார்த்தைகளைப் பொறுத்து தான் மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்...


99.உங்களை சுற்றி உள்ளவர்களை நீங்கள் மாற்றி அமைக்க முடியாது...

ஆனால்...

உங்களை சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மாற்றியமைக்கலாம்...


100. அனாதை குழந்தைகள் மனிதரின் ஆசையின் பிழைகள்...

முதியோர் இல்லங்கள் மனிதரின்  வளர்ப்பின் பிழைகள்...


101. நீங்கள் வெற்றி அல்லது தோல்வி  அடைவதை உங்களை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது...


102. எதையும், ஆழமாக நேசிக்காதீர்கள்...
 
துன்பப்படுவீர்கள்...

எதையும், ஆழமாக யோசிக்காதீர்கள்...

குழம்பி விடுவீர்கள்...

எதையும், எங்கும் யாசிக்காதீர்கள்...

அவமானப்படுவீர்கள்...


103. தானாக உயரும் வயது... 

தடுக்க முடியாத நேரம்...

கடந்து செல்லும்  இளமை...

காலைத் தடுக்கும் சமூகம்...

இத்தனையும் சேர்ந்தது தான் வாழ்க்கை...


104. இவ்வுலகில் இருந்து விட்டு போவதல்ல மனித வாழ்க்கை...

உங்களின் செயலை சில காலமாவது பலர் பின்பற்றி வாழ்வதே நல் வாழ்க்கை...


105. வீரனைப் போரிலும்

யோக்கியனை கடனிலும்

மனைவியை வறுமையிலும்

நண்பனை கஷ்ட காலத்திலும் அறிந்து கொள்ளலாம்...


106. கடவுள் உங்களுககு கஷ்டங்கள் 
தரும் போது கலங்காதீர்கள்......

அவர் உங்களுக்கு கஷ்டங்கள் தருவது உங்களை சோதிக்க அல்ல...

உங்களைச் சுற்றி எத்தனை போலி 
உறவுகள் உள்ளன என்று உங்களுக்கு உணர்த்தத் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்....


107. பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது முழு மௌனத்தைவிடச் சிறந்தது, பயன் உள்ள ஒரு விஷயத்தைப்பற்றி மிகமிகத் துல்லியமாகவும், உண்மையான முறையில் சொல்லக் கற்றுக் கொள்வதுதான் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.


108. கடலின் அலையில் மிதந்து வரும் தக்கை கரை சேர்ந்து விடும்...

வாழ்க்கை கடலில் துன்ப அலைகள் தொடர்ந்து தாக்கும் போது...

உங்கள் மனதை பற்றற்ற மிதவையாய் மாற்றி விடுங்கள்...

மகிழ்வாய் கரை சேர்ந்திடுவீர்கள்...


109. சிலருக்கு இலையாக இருப்பதும்...

சிலருக்கு கிளையாக இருப்பதும்...

சிலருக்கு நிழலாக இருப்பதும்...

சிலருக்கு வேராக இருப்பதும்...

அவரவர் நம்மை புரிந்து கொண்டு வெளிப்படுத்தும் உண்மையான அன்பில் தான் உள்ளது..


110. இன்னும் அடையாளப் படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள் மறைத்து கிடக்கின்றன

அவை, உங்களது வெற்றியாக கூட இருக்கலாம்

அது மறைந்து தான் இருக்கின்றதே தவிர இல்லாமல் இல்லை

உண்மையான தேடலில் தான் வெற்றி உள்ளது


111. தூக்கி எறியும் முன் நன்றாக யோசியுங்கள்

உங்களை இன்னொருவர் தூக்கி எறிய வெகு நேரம் ஆகாது... 


112. மனதை மகிழ்ச்சிக்குப் பழக்குங்கள்...

எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என்று முடிவு கட்டினால் கடைசி வரை யாரும் சிரிக்கவே முடியாது...


113. சிரித்து கொண்டே கடந்து விடுங்கள்....

உங்கள் கஷ்டங்களை மட்டும் அல்ல...

உங்களை கலங்க வைத்தவர்களையும்....


114. இப்பூவுலகில் விதைகள்  தனக்கு தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை...

மாறாக கிடைத்த இடத்தில்,
தன்னை மரமாகவோ செடியாகவோ மாற்றிக்கொள்கின்றன.

விழுந்த இடத்திலேயே இருந்து,
எழுந்து வாருங்கள்... வெற்றி நிச்சயம்.


115. கோபம் என்பது ஓர் அற்புதமான எரிபொருள்...

அதை உங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்...


116. ஓடி ஓடி உதவி செய்யும் வரைதான் அனைவரிடமும் மதிக்கப்படுவீர்கள்...

ஒரு முறை மறுத்துப்பாருங்கள்... 

அடுத்த நொடியே மறக்கப்படுவீர்கள்...


117. பிறரது சோகத்தைப் பார்த்து சிரிக்கும் போது  நீங்கள் முட்டாளாக மாறி விடுகிறீர்கள் ....

ஆனால் உங்கள் சோகத்தைப் பார்த்து சிரிக்கும் போது நீங்கள்
மேதையாகி விடுகிறீர்கள்....


118. பிடிவாதம் என்னும் வாதம் 

நம்மை ஆட்கொண்டிருக்கும் வரை 

விவாதங்கள் நீண்டு கொண்டே தான் போகும்


119. பொறாமை குணத்தை போர்வையாய் போர்த்தி கொள்ளாதீர்கள்...

அது உங்கள் மகிழ்ச்சியை மட்டுமின்றி உங்களையே அழித்துவிடும்.


120. நிரந்தரம் இல்லாத எதையோ அடைவதற்கான  நோக்கத்தில்...

நிரந்தரம் உள்ள நல்ல விஷயங்களை இழக்கிறோம்...
 

121. கர்வம் கொள்ளாதீர்கள்
கடவுளை இழப்பீர்கள்

பொறாமை கொள்ளாதீர்கள்  நண்பனை இழப்பீர்கள்

கோபம் கொள்ளாதீர்கள் 
உங்களையே இழப்பீர்கள் 


122. கடவுளிடம் தயங்காமல் கேட்கிறோம்

அதை விட சிறந்தது உரியவரிடமே கேட்டு விடுங்கள் 

கிடைக்குமா இல்லையா என்பது அடுத்த நொடியே தெரிந்துவிடும்...


123. தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்...

அர்த்தம் இல்லாமல் போய்விடும்...

வார்த்தையும்...
வாழ்க்கையும்...


124. உங்களால் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றால்...

அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்...

அதுவே, அந்த பிரச்னையை தீர்ப்பதற்கான உங்களுடைய பங்கு ஆகும்...


125. உங்களை உண்மையாக நம்பியவரை எந்த நிலையிலும்...

காயப்படுத்தும் எண்ணத்தில் பழகாதீர்கள்...

ஏனெனில்,  உண்மை, நேர்மை, அன்பு எல்லாம் அழியாத சொத்துக்கள்

காலம் செல்ல செல்லத் தான் அதன் மகத்துவம் புரியும்...

அப்பொழுது, அது இல்லாமல் கூட போகலாம்...


126. எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள்...

ஆனால் மனிதர்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்...


127. கற்றுக்கொடுப்பதும்...

கற்றுக்கொள்வதும்...

வாழ்வில் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கும்...

தவறு என்றால் கற்றுக் கொடுங்கள்...

சரி என்றால் கற்றுக்கொள்ளுங்கள்...


128. வாய்ப்பு என்பது தீக்குச்சி போன்றது

தீக்குச்சியை உரசியவுடன் பற்றி எரிய வேண்டும்

இல்லையேல்...

வாய்ப்பு மற்றொரு தீக்குச்சிக்கு வழங்கபடும்...


129. உங்களால முடியாது

இந்த வார்த்தை...

சிலரை தூண்டி விடவும் செய்கிறது...
 
சிலரை துவண்டு விடவும் செய்கிறது...


130. உங்கள் தவறை உணர்ந்து கொண்டு அமைதியாகும் போது

நீங்கள் தாழ்வதில்லை

மேலும் உயருகிறீர்கள்...


131. சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும்

சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

சில சோகங்களை நேசிக்கப் பழகுங்கள் 

சில சோகங்களை மறக்க பழகுங்கள்

வாழ்க்கை யதார்த்தமானது.


132. சிறு தவறுக்காக உங்களை பின் தள்ள நிறைய பேர் இருக்கிறார்கள்...

அவர்களுக்கு உங்களையும் உங்கள் திறமையும் விட்டு கொடுத்து விடாதீர்கள்...


133. காலம் போடும் கணக்கை கடவுளை தவிர வேறு யாராலும் அறிய முடியாது...

கடமையை செய்யுங்கள்

கடவுளை நினையுங்கள் 

நடப்பதெல்லாம் நன்மைக்கே...


134. எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்...

உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது... 

எல்லாம் நீங்களாக  தேடி கொண்டதுதான்...


135. நிரந்தரம் இல்லாத உலகம்...

சுயநலம் நிறைந்த உலகம்...

யாரும் யாருக்காவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்...


136. திறமை நிறைந்த உலகில் தினம் புலம்பி என்ன செய்ய போகிறாய்?

எண்ணற்ற திறமைகளை 
உள்ளே மறைத்து 
உண்மை அறிந்தும் 
ஊமையாக நிற்பாயோ? 

செயல்கள் உனதாகும் 
பலன்கள் உனக்கேயாகும்! 

விடியலுக்கு காத்திருந்தாய் 
விடிந்தபின்னும் கண்மூடலா? 

நாளை உனதாகும் 
நம்பிக்கை உள்ளிருந்தால்....
வெற்றி நிச்சயம்!


137. நீங்கள் தைரியமாக எழுந்து போராடும் வரை..

உங்களை யாரும் மதிக்க போவதில்லை....

இங்கு பயத்திற்கு இடம் இல்லை....

பலத்திற்கும் உண்மைக்கும் மட்டுமே இடம் உண்டு...


138. முடிந்தவரை மனிதர்களிடம் எதிர்பார்ப்பதை குறைத்து கொள்ளுங்கள்...

ஏனெனில், எல்லோரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்...


139. நம்மில் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?

பிரச்சினைகள் வரும்போது அல்ல...

பிரச்சினைகளை பார்த்து பயந்து விலகும் போது...


140. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையாயிருங்கள்...

வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே...

ஆணவம் ஆயுளை குறைக்கும்...


141. அவர் சரியில்லை இவர் சரியில்லை என ஏராளமான ஏளன தள்ளுபடிகளை செய்து

நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும்
சுருக்கி கொள்ளாதீர்கள்

உங்கள் உலகத்தை மிக சிறியதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்


142. காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்...

அனைத்திற்கும் உரிய நேரம் என்று ஒன்று இருக்கிறது...

அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர...

நன்மை ஏதும் இல்லை...


143. வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள். தானாகவே அடங்கி விடும்...

வெள்ளை ஆடை அணிந்து கறைப்படாமல் வருவது எவ்வளவு கடினமோ

அதுபோல சிறு தவறு கூட செய்யாமல் ஒரு நாள் கடப்பது மிகவும் கடினம்...


144. வாழ்க்கையை சற்று தனித்து வாழவும் பழகிக்கொள்ளுங்கள்

நம்மோடு இருப்பவர்கள் அனைவரும் நம் முகத்தின் முன் நடந்து கொள்வது போன்று முதுகின் பின் இருப்பதில்லை

சர்க்கரை போன்று இனிக்க இனிக்க பேசினாலும்

ஒருநாள் பாகற்காய் போன்று மாறும் ஆற்றல் கொண்டவர்களே.


145. அறிவினால் வருவதில்லை பக்குவம்...

வாழ்க்கையில் விழும் அடிகளால் வருவதே பக்குவம்...


146. வாழ்வில் தடுக்கி விழும் தருணத்தில் தான் கற்றுக்கொள்கிறீர்கள்

நீங்கள் யார் என்பதையும்

உங்களுடன் இருப்பவர்கள் யார் என்பதையும்...


147. எதன் மீதோ, யார் மீதோ கோபம் கொண்டிருக்கிறீர்கள் என்றால்...

இன்னும் அவர்களை மனதில் வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்...


148. எதிரில் நிற்பவரெல்லாம் எதிரியுமில்லை...

தோளில் கையிட்டவரெல்லாம் நண்பருமில்லை...

இதை உணர்ந்தவருக்கு கவலையுமில்லை...

வாழ்க்கை ஒரு ஓவியம் அல்ல திரும்ப திரும்ப வரைவதற்கு...

அது ஒரு சிற்பம் செதுக்கினால் செதுக்கியதுதான்...


149. தவறுகளுக்கு சூழ்நிலை காரணமாக இருக்கலாம்

திருத்திக் கொள்ளாததற்கு சூழ்நிலை காரணமாகாது

ஒருவரின் அலட்சியம் மற்றவருக்கு அவசியம்

கற்றுக்கொள்ளுவத விட காயப்படுவதே அதிகம் இங்கே...


150. உங்கள் பாதையை நீங்களே தேடிக்கொள்ளும் தண்ணீராக இருங்கள்...

அடுத்தவர் பாதையை தடுக்கும் பாறாங்கல்லாக ஒரு போதும் இருந்து விடாதீர்கள்...


151. எவர் பிறர் செய்யும் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ

அவரால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது...


152. வாழ்க்கை என்னும் கணக்கு பாடத்தில் நீங்கள் சிந்தித்து செயல்படாவிடில் கழிக்கப்படுவீர்கள்...


153. எல்லோருக்கும் நமது மறதி அழகாய் தெரிகிறது

நமது மன்னிப்பு அழகாய் தெரிகிறது

நமது பொறுமை அழகாய் தெரிகிறது

ஆனால் நமது தன்மானம் மட்டும் அழகாய் தெரிவதில்லை

வீம்பாகவே தெரிகிறது


154. புறப்படும் போது தூரத்தை பார்க்காதீர்கள்

இலக்கை பாருங்கள்...

திரும்பும் போது இலக்கை பார்க்காதீர்கள்

சென்று வந்த தூரத்தை பாருங்கள்...


155. பிடித்தவர்களுக்காக நடிக்க கற்றுக் கொள்ளாதீர்கள்...

நாடகம் முடிந்த பின்பு உங்களுக்கு பிடித்தது என்று எதுவும் இருக்காது...


156. தேவைகள் என்னவோ தீரப்போவதில்லை

ஒன்று போனால் மற்றொன்று

வசதியில் இல்லை நமது வாழ்வு.

வாழ்தலில் தான் உள்ளது வாழ்க்கை.


158. பெருந்தன்மை என்பது உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது

பெருமை என்பது உங்களுக்கு தேவையானதை விட குறைவாக எடுத்துக்கொள்வது...


159. மனிதர்கள் முதலில் தேடுவது...

பிடிக்காதவர்களின் பாதகங்களையும்...

பிடித்தவர்களின் சாதகங்களையும் தான்...


160. சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்...

சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லி தரும்...


161. உரிமையின் உச்சம் என்பது...

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதே தவிர...

உத்தரவு கொடுப்பது அல்ல...


162. வாழ்வில் முன்னேற நாம் விட்டுச் செல்ல வேண்டியது கால் தடங்களை மட்டுமல்ல

ஏளனம், எதிர்பார்ப்பு, அவமானம் உள்பட சில துரோகங்களையும் தான்

சில சுவடுகள் மனதில் வடுக்களாக இருந்தால் தான்

வாழ்வில் நமக்கு சாதிக்கும் வல்லமை வருகிறது...


163. உங்களைத் தூக்கி விடுபவர்கள், உங்கள் தகுதியை அறிந்தவர்கள்
 
உங்களை வளர விடாமல் தடுப்பவர்கள், உங்கள் பலத்தை அறிய விரும்புபவர்கள்

அந்த இருவருக்குமே நன்றி சொல்லி கொண்டு பயணியுங்கள்.


164. நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று சண்டை போடமாட்டார்கள்...

ஆனால் சத்தமில்லாமல் உங்களிடமிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள்...


165. தான் தவறு செய்தால் வக்கீலாக மாறுவதும்..

பிறர் தவறு செய்தால் நீதிபதியாக மாறுவதும்..

இவ்வுலகின் இயல்பு...


166. புதைந்த பிறகே விதையும், சிதைந்த பிறகே மனமும் புதிய கோணம் காண்கிறது...
            
விளக்கிற்கு வெளிச்சம் கொடுக்க மட்டுமே தெரியும், வெளிச்சம் எங்கு தேவை என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்...


167. சக மனிதனை சமமாக மதிக்காத வரை நீங்கள் மனிதராக ஆக முடியாது

இங்கு எவரும் எவரையும் விட உயர்ந்தவரும் இல்லை... தாழ்ந்தவரும் இல்லை...


168. விருப்பங்களை கருத்தில் வையுங்கள்...

வெறுப்புகளை நெருப்பில் வையுங்கள்...

சறுக்கி விழுந்தாலும் நொறுங்கி போகாதீர்கள்...

சட்டென தவழ்ந்தெழுங்கள்...


169. கடுமையான பாதை என்று எதுவுமில்லை...

பாதையை மாற்றாதீர்கள்...

பாதை குறித்த உங்கள் பார்வையை மாற்றுங்கள்...


170. தவறும் சரியாகத் தெரியும் அதை உணராத வரையில்...

உணர்ந்தும் நம்முடனே இருக்கும் அதை திருத்தாத வரையில்...


171. நீங்கள் வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்தால் வெறும் கல் தான்...

உங்கள் மதிப்பு உங்களை மட்டும் சார்ந்தது அல்ல...

நீங்கள் சேரும் இடத்தையும் சார்ந்தது...


172. மகிழ்ச்சி வரும்போது

இது எனக்கு ஏன் நேர்ந்தது?

என்று கேட்காத நமக்கு...

துன்பம் வரும் போது... 

இது எனக்கு ஏன் நேர்ந்தது?

என்று கேட்க உரிமை இல்லை...


173. தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை...

தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டு எந்த பயனுமில்லை...


174. பரவாயில்லை என்ற வார்த்தைக்குள் அடங்கி இருக்கிறது...

பல வலிகளும் சோகங்களும் ...


175. அதிக நேரம் இருக்காது அதிஷ்டம்

நீண்ட தூரம் வராது சிபாரிசு 

எல்லா நேரமும் கிடைக்காது உதவி

எப்பொழுதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை.


176. எல்லா தத்துவங்களும் இளமையிலேயே வாசிக்க கிடைக்கிறது

ஆனால் அதை பின்பற்றத்தான் முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது


177. பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செலவழியுங்கள்

பணத்தை அல்ல...

நேரத்தை...


178. கொடுப்பது இறைவன் என்று உணர்ந்து கொண்டால்

கிடைப்பது எதுவும் தாழ்வாக தெரியாது


179. எதிரிகளின் அவமானங்களை காட்டிலும்

உறவுகளின் அன்புக்காகவே

சுயமரியாதையை அதிகம் இழக்கிறோம்


180. யாரையும் நம்பி யாரும் இல்லை என்று புரிவதற்குள் பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது...

நமக்கென்று யாரும் இல்லை என்று புரிவதற்குள் மீதி வாழ்க்கை முடிந்து விடுகிறது...


181. அதிகமாய் விவாதித்து மனங்கள் உடைபடுவதை விட

அமைதியாய் கடந்து செல்வதே உறவுகள் தொடர வழிவகுக்கும்


182. கண்ணாடி குடுவையில் உள்ள நீர், 
குடுவையின் வடிவுக்கு ஏற்ப மாறுகிறது.. 

உன் எண்ணங்களோடு கண்ணாடியில் உன்னை பார்.. 

எண்ணங்களின் வடிவமாய் நீயிருப்பாய்.  

நல்லோனுக்கு நல்லோனாய்... 
வல்லோனுக்கு வல்லோனாய்... 

நீரைப் போல நீயிருந்தால்...  வெற்றி நிச்சயம்!


183. உங்கள் வாழ்வில் அடுத்த நிலையை அடைய முயற்சி செய்யுங்கள்...

வெற்றி பெறுவீர்கள்...

ஒரு போதும் அடுத்தவர் நிலையை அடைய முயற்சி செய்யாதீர்கள்...


184. பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்

மனிதர்களை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்.


185. பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்...

இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்...


186. தோற்றுவிட்டேன் என்று சொல்வதை விட

இந்த முறை வெற்றி பெறவில்லை என்று சொல்லி பழகுங்கள்...

 தன்னம்பிக்கை வளரும்...


187. உன்னைப் பற்றி உனக்கு மட்டுமே தெரியும்... 

உன்னை உன்னோடு மட்டுமே ஒப்பிட்டு பார்.. 

கண்ணை மூடி பயணம் செய்தாலும், 
உன்னை நம்பி செல்.. 

விண்ணைக் கூட, மண்ணை தொட வைக்கலாம்... 

உன்னை நம்பி நீ இருந்தால்...
வெற்றி நிச்சயம்!


188. பத்தில் ஒன்றாக இருப்பதை விட, 
பத்தில் முதன்மையாக இருக்க பழகு... 

வித்துகளில் முந்துபவை தான், 
மரமாகின்றன... 

அடி வாங்கும் பந்து தான், வெற்றியை தீர்மானிக்கின்றன. 

காத்துக் கொண்டிராமல், 
மனக்கண்ணை விழித்து முன்னே வா.   
வெற்றி நிச்சயம்!


189. நல்ல விஷயத்திற்காக

தனியாக நிற்க வேண்டி

வந்தாலும் தைரியமாக

நில்லுங்கள்...


190. அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்துவிடும் என்பதால் தான்

சிலவற்றை கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.


191. எந்த உறவிலும்

பிரிவின் வலி தீர்வதற்குள் பேசி விடுங்கள்...

வலி பழகி விட்டால் உறவு முறிந்துவிடும்...


192. வானம் ஒரே மாதிரியாக இருந்தாலும்...

வானிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை...

வாழ்க்கையும் அப்படித்தான்...


193. வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்த்தால்

நாம் பெற்றுவிட்ட எல்லாவற்றின் பின்னும்

ஏதேனும் ஒரு இழப்பு இருக்கத்தான் செய்யும்


194. கோபத்தில் கிடைத்ததையெல்லாம் தூக்கி எறிவதை விட...

அந்த கோபத்தையே தூக்கி எறிந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


195. உங்களை குறை கூறும் பலருக்கு உத்தமனாய் இருப்பதை விட...

உங்களை நம்பும் சிலருக்கு உண்மையாய் இருங்கள்...


196. கஷ்டங்களை பாரமாக நினைத்து கலங்காதீர்கள்

நம்மை விட உருவத்தில் மிக சிறிய நத்தை கூட

பிறந்த முதல் இறப்பு வரை முதுகில் சுமையை தாங்கி தான் வாழ்கிறது என்பதை மறக்காதீர்கள்.


197. அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது...

எல்லாவற்றையும் புரிந்த பிறகு எஞ்சி நிற்பதே...


198. வார்த்தைகளால் சொல்லும் பதிலை விட

வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமையானவை...

No comments: